Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.

"ராசி பலன்கள்"

Astrological Signsகர வருடத்திற்கான 12 ராசிகளுக்கும் உரிய பொதுவான ராசி பலன் இங்கே வழங்கப்பட்டுள்ளது. இது பொதுப்படையான பலனாக இருந்தாலும் பெரும்பாலும் சரியாக இருக்கும். மேலும் வாரா வாரம் ராசி பலன், மாதா மாதம் ராசி பலன் தங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் பிறந்த ஊர் இவற்றைக்கொண்டு மிகவும் குறிப்பான (தங்களுக்கே உரித்தான) சிறப்பான ராசி பலன்களை ஈமெயில் மூலம் பெற மாதாந்திர கட்டணம் ரூ 50 மட்டும். ஒரு வருடத்திற்கும் சேர்தார்போல் மொத்தமாக கட்டினால் ரூ 500 மட்டும் செலுத்தினால் போதும். மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை எப்படி பெற்றுக்கொண்டாலும் கட்டணம் ஒன்றுதான். ஆனால் பலன்களின் தொகுப்பு மாத பலன்களில் சற்று விரிவாக இருக்கும். வார பலன்கள் சற்று சுருக்கமாக இருக்கும்.

"மேஷ ராசி (அஸ்விநி, பரணி, கார்த்திககு1ம் பாதம்) பலன்"

Mesham Rasiபூமி காரகனான செவ்வாய் ஆட்சி வீடாகக் கொண்ட மேஷ ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வருடம் சித்திரை 25ம் தேதி (மே-8) முதல் குரு விரயஸ்தானத்தில் இருந்து ஜென்மத்திற்கு வருகிறார். 6லிருந்து நன்மை செய்து வந்த சனி ஐப்பசி மாதம் 15ம் தேதி முதல் 7ம் இடத்திற்கு வருகிறார். வைகாசி 23 முதல் ராகு 2க்கும் கேது 8க்கும் மாறுகின்றனர். ஆகவே சித்திரை 25க்குப் பிறகு தொழில் அல்லது குடும்ப ரீதியாக இடமாற்றம் செய்ய நேரிடலாம். வீடு கட்டுதல், திருமணம், புதிய தொழில் முயற்சி போன்றவற்றில் தடைகள் ஏற்பட்டு விலகும். ஐப்பசி 15க்குப்பின் துணைவரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். குழந்தைகளின் நலன் நன்றாக அமையும். வீண் குழப்பங்களைத் தவிர்க்க குடும்பத்தாருடன் நன்கு ஆலோசித்தபின் முடிவுகளை மேற்கொள்ளவும். பங்கு வர்த்தகத்தில் எச்சரிக்கை தேவை. குரு சாரத்தினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க குலதெய்வ வழிபாடு அவசியம், ராகு-கேது பூஜை, சனிப்பெயர்சியின்போது சனிக்கு சிலவாரங்கள் தொடர்ந்து எள் தீபம், ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும். மொத்தத்தில் 50 சதவீதம் நற் பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

"ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ம்ருகசீர்ஷம் 1,2 பாதம்) பலன்"

Rishabham Rasiகளத்திரகாரகனான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காhரர்கள். இவ்வரும் தொழில்ரீதியாக அதிகமான பயமுடக்கங்கள் செய்வேணடியதிருக்கும். அதற்கான நல்ல பலனக்கள் ஐப்பசி மாம் 15ம் தேதிக்குப் பிறகுதான் தெரியும். குழந்தைகள் படிப்பு மற்றும் உத்தியோக விஷயமாக பிரிய நேரும். வீடு கட்டுவதைக்காட்டிலும் நிலம் வாங்குவது லாபகரமாக அமையும். கணவன்-மனைவிக்குள் சில பிணக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்கள் இடமாற்றத்தால் நன்மை அடைவார்கள்.
வைகாசி 23ம் தேதி ராகு - கேது பெயர்ச்சிக்குப்பிறகு ஒரு முறை ராகு ஸ்தலத்திற்குச் சென்று வழிபடுவது நன்மை தரும். வருடக் கடைசியில் தொழில் துறை நன்கு வளர்ச்சி அடையும். ஆவணி புரட்டாசி மாதங்களில் சகோதரர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். இளைய சகோதரனுக்கு பாதிப்புகள் உண்டாகலாம். தீபாவளி முடிந்து ஒரு வார காலத்திற்குள் நல்ல பாண்டித்யம் உள்ள வித்வான்களைக் கொண்டு சுதர்ஸன ஹோமம் பண்ண சுபிக்ஷமான வாழ்க்கை மற்றும் தொழில் அபிவிருத்தி உண்டாகும்.

"மிதுன ராசி (ம்ருகசீர்ஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம்) பலன்"

Midhunam Rasiவித்யாகாரகனான புதனை ஆட்சிவீடாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் இதுவரை 10மிடம் இருந்து உங்கள் தொழில் துறையைக் கெடுத்த குரு பகவான் சித்திரை 25ந் தேதி முதல் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியில் இருந்து குழப்பத்தைக் கொடுத்த கேதுவும் -- ராகுவும் 12, 6மிடம் வைகாசி 23ந் தேதி முதல் மறைகிறார்கள். 4மிடம் அர்த்தாஷ்டம சனியாக இருந்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதி முதல் உச்சகதியில் 5மிடம் செல்கிறார். ஆகவே, இவ்வருடம் உங்களுக்குப் பொன்னான வருடமாகும். இதுவரை திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். இவ்வருடம் சொந்தமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தொழில் துறையில் பல வழிகளிலும் நன்மை கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். இவ்வருடம் து}ரதேசங்களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு ஏற்படும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் அதில் வெற்றியைப் பெறுவீர்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு இவ்வருடம் நல்ல வேலை கிடைக்கும. இவ்வருடம் மேலும் அதிகமான நன்மையைப் பெற அக்ஷய திருதியை அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்யவும். வளமான நல்ல வாழ்க்கையைப் பெறுவீர்கள். மொத்தத்தில் இவ்வருடம் 75 சதவீதம் நன்மையைப் பெறுவீர்கள்.

"கடக ராசி (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் ) பலன்"

Kadagam Rasi மாத்ருகாரகனாகிய சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இதுவரை பாக்கியஸ்தானத்தில் இருந்து பலவகையிலும் நன்மை செய்த குரு பகவான் சித்திரை 25ந் தேதி முதல் தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். இதுவரை 6 -- 12 ல் இருந்து ராகு--கேதுக்கள் வைகாசி 23ந் தேதி முதல் 5 -- 11ல் சஞ்சரிக்கிறார்கள். இதுவரை 3மிடம் இருந்து வெற்றியைக் கொடுத்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதி முதல் 4மிடம் சஞ்சரிக்கிறார். ஆகவே, இவ்வருடம் தொழில் துறையில் எச்சரிக்கை தேவை. உத்யோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். உறவினர்களுக்குள் சில பிணக்குகள் ஏற்பட்டு மறையும் திருமணம் ஒருமுறை தடைபட்டுப் பிறகு நடக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் புரட்டாசி மாதத்திற்குப் பிறகு முதலீடு செய்யவும் ஓரளவு லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கையுடன் பேசிக் கொள்ளவும். தன் பேச்சே கூட்டு முறிவதற்குக் காரணமாகிவிடும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். வீடுகட்டும் வேலை சிலகாலம் தள்ளி வைப்பது நல்லது. மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவீத நன்மையைப்; :பெறுவார்கள்.

"சிம்ம ராசி (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) பலன்"

Simma Rasi ஆத்மகாரகனாகிய சூரியனை ஆட்சிவீடாகக் கொண்ட சிம்மராசிக்காரர்கள் இதுவரை அஷ்டமத்தில் இருந்து பல வகைகளிலும் தொல்லை கொடுத்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் உங்கள் பாக்கியஸ்தானத்திற்கு வந்து பலவகைகளிலும் நன்மை தரப் போகிறார். வைகாசி மாதம் 23ந் தேதி முதல் ஏற்படும் ராகு -- கேது சஞ்சாரம் பெரிய பாதிப்பைத் தராது. இவ்வாரங்கள் தொழிலில் தொய்வு ஏற்பட்டுப் பிறகுசரியாகிவிடும். கடந்த 7 வருடங்களாக ஆட்டிப்படைத்த ஏழரை நாட்டுச் சனி இவ்வருடம் ஐப்பசி 15ந் தேதி முதல் விலகுகிறது. ஆகவே, இந்த ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொன்னான ஆண்டாகும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் . குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும்.. குழந்தைகள் நல்ல எதிர்காலம் பெறுவார்கள். விரைவில் வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்யும் நேரம் ஏற்படும். பல வருடங்களாக முடக்கமான பணம் விரைவில் வசூலாகும். தகணவன் -- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் உடனே தீரும். தொழில் துறையில் நல்ல லாபம் ஏற்பட்டு தனவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த ராசிக்காரர்கள் மேலும் அதிக நன்மைபெற வருடம் தொடங்கும் சித்திரை மாதம் 1ந் தேதி அன்று வீட்டில் கணபதி ஹோமமும் சுதர்ஸண ஹோமமும் செய்யவும். வீட்டில் பலவகைகளிலும் மசிழ்ச்சி பொங்கும். மொத்தத்தில் இவ்வருடம் 75 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.

"கன்னி ராசி (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம்) பலன்"

Kanni Rasi புத்திரகாரனாகிய புதனை ஆட்சி வீடாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் இதுவரை குருவால் நன்மை பெற்ற நீங்கள் சித்திரை 25ந் தேதி முதல் அஷ்டம குருவின் ஆதிக்கத்தைப் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் இருந்த ராகு கேதுக்கள் பாக்கியஸ்தானத்திற்கு வைகாசி 23ந் தேதி முதல் இடம் பெறப் போகிறீர்கள். ராசியில் இருந்த ஜென்ம சனி ஐப்பசி 15ந் தேதி முதல் குடும்ப ஸ்தானத்திற்கு இடம் பெயரப் போகிறார். இதனால், சித்திரை 25ந் தேதி முதல் ஐப்பசி மாதம் 15ந் தேதி வரை எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும். அச்சமயம் தொழிலில் முடக்கம் ஏற்பட்டுப் பிறகு சரியாகும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் பெறுவார்கள். வீடு கட்டுவதில் ஈடுபட்டவர்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ஐப்பசி 15ந் தேதி முதல் ஏற்;படும் சனி பெயர்ச்சி உங்களுக்குப் பலவகைகளிலும் நன்மை தரும். அதுவரை தடைபட்ட தொழில் துறைகள் இனி சரியாக ஆரம்பிக்கும்.. குடும்பத்திலும் உறவினர்களிடமும் சில பிணக்குகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமையும். இந்த ராசிக்காரர்கள் சித்திரை 25ந் தேதி முதல் ஐப்பசி 15ந் தேதி வரை தொடர்ந்து வியாழக்கிழமை குருபகவானுக்கு நெய்தீபமும் சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றிவர சகல நன்மைகளும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.

"துலா ராசி (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதம்) பலன்"

Thula Rasi களத்திரக்காரகனான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலாம் ராசிக்காரர்கள் இதுவரை 6மிடத்தில் இருந்து பல வகைகளிலும் தெர்ல்லை கொடுத்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் ஏழாமிடம் வருகிறார். 3 -- 9 ல் சஞ்சரித்த ராகு கேதுக்கள்; வைகாசி 23ந் தேதி முதல் 2 -- 8 ல் சஞ்சரிக்கவிருக்கிறார்கள். இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு வந்து உச்சபலம் பெறுகிறார்.. இதனால், பலகாலம் தடைப்பட்ட திருமணம் இவ்வருடம் இனிதே நிறைவேறும். தொழில் துறையில் இருந்த தேக்கநிலை மறையும். இதுவரை தொழில்துறையில் நடந்த முடக்கங்களுக்கு நல்ல பலன்; கிடைக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க ஆரம்பிக்கும். பலகாலம் வசூலாகாத தொகை இவ்வருடம் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவர். உடல்நிலை சீராகும். தடைப்பட்டிருந்த குழந்தைகளின் முன்னேற்றம் இவ்வருடம் சரியாகும். இந்த ராசிக்காரர்கள் வைகாசி 23ந்தேதி முதல் 16 வாரங்கள் செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கும் வெள்ளிக்கிழமை வினாயகருக்கும் நல்லெண்ணெய் விளக்கு வைத்து வர நன்மைகள் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.

"விருச்சிக ராசி (விசாகம் 4ம் பாதம், அநுஷம், கேட்டை) பலன்"

Vruchiga Rasi பூமிக்காரகனாகிய செவ்வாயை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சிக ராசிக்கர்;ரர்கள் இதுவரை 5மிடம் இருந்து பலவகைகளிலும் நன்மை செய்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் 6மிடம் மறைகிறார். 2 -- 8மிடம் சஞ்சரித்த ராகு -- கேதுக்கள் வைகாசி 23ந்தேதி முதல் 1 -- 7 ல் சஞ்சரிக்கவிருக்கிறார்கள். இதுவi லாபஸ்தானத்தில் ;இருந்த சனிபகவான் ஐப்பசி 15ந் தேதிமுதல் ஏழரை நாட்டுச் சனியாக உங்களைப்பிடிக்கவிருக்கிறார். இதனால், உங்கள் புது முயற்சிகள் அமைத்தும் சித்திரை 25ந் தேதிக்குள் செயல்படுத்தி விடவும். இவ்வருடம் ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடம் சனி உச்சமாக இருப்பதால் சுப செலவுகள் மட்டுமே ஏற்படும். அசுபச் செலவுகள் ஏற்படாது. குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டு பிறகு சரியாகும். கணவன் மனைவிக்குள் சில பிணக்குகள் ஏற்பட்டுப் பிறகு சரியாகும். புது முயற்சிகளைச் செயல்படுத்தும் போது கவனமாகச் செயல்படுத்தவும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. இவ்வருடம் புரட்டாசி மாதம் வரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். இவ்வருடம்; ஒரு வியாழக்கிழமை திருச்செந்;து}ர் சென்று தக்ஷpணாமூர்த்pக்கு அபிஷேகமும், ஐப்பசிக்குப் பிறகு ஒரு சனிக்கிழமை திருநள்ளாறு சென்று சனிக்கு 8 எள் தீபம் வைத்து கருப்பு வஸ்திரம் அணிவித்து வரவும். உள்ளுரில் பிரதி வியாழன் தக்ஷpணாமூர்த்திக்கு நெய் தீபமும் சனிக்கிழமை எள்தீபமும் ஆஞ்சநேயருக்கு நெய்தீபமும் ஏற்றிவர சகல நன்மைகளும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 55 சதவீத நன்மைகளைப் பெறுவார்கள்.

"தனுசு ராசி (மூலம், பூராடம், உத்ராடம் 1ம் பாதம்) பலன்"

Dhanur Rasi தேவகுரு பிரகஸ்பதியை ஆட்சி வீடாகக் கொண்டதனுசு ராசிக்காரர்கள் இதுவரை 4மிடத்தில் சிரமத்துடன் நன்மையைக் கொடுத்த குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் 5மிடம் சுபபலனை முழுவதுமாகத் தரவிருக்கிறார். 1 -- 7 மிடம் இருந்து சில சங்கடங்களை;க கொடுத்த ராகு கேதுக்கள் 6 -- 12 மிடம் வைகாசி 23ந் தேதி முதல் மறைகிறார்கள். தொழில் ஸ்தானத்தில் சில சங்கடங்களைக் கொடுத்த சனிபகவான் இனி லாபஸ்தானத்திற்கு வந்து உச்ச பலனைத் தரவிருக்கிறார். இதனால் தொழில் துறையில் இருந்த முடக்கங்கள் அனைத்தும் இனிச் சரியாகும். எதிர்பாராத தனலாபம் பெறுவீர்கள் புரட்டாசி மாதத்தில் குழந்தைகளின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுப் பிறகு சரியாகும். வெகுகாலம் தடைபட்டிருந்த திருமணம் இனி சுபமாக நடக்கும். குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமையும். வெகுகாலம் குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு இவ்வருடம் குழந்தை பாக்கியம் ஏற்படும். வீடு கட்டி புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வீர்கள். தஉத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமைய ஆவணி மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அபிஷேகமும் ஐப்பசி மாதம் ஒரு சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் செயங்ய சகல நன்மைகளும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவீத நன்மையை பெறுவார்கள்.

"மகர ராசி (உத்ராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்) பலன்"

Makara Rasi தொழில்காககனாகிய சனியை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள் இதுவரை 3 மிடத்தில் இருந்து குருபகவான் சித்திரை 25ந் தேதி முதல் 4மிடம் வருகிறார். 6 -- 12 ல் மறைந்திருந்த ராகு -- கேதுக்கள் வைகாசி 23ந் முதல் 5-11ல் சஞ்சரிக்க இருக்கிறார்கள். 9மிடத்தில் சஞ்சரித்த சனி, 15ம் தேதிமுதல் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் தொழில் துறையில் சிறு சுணக்கங்கள் ஏற்பட்டு பிறகு சரியாகும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புரட்டாசி முதல் புதிய முதலீடு செய்யலாம். அதுவரை தவிர்க்கவும். திருமண ஏற்பாடுகள் சில தடைகள் ஏற்பட்டு பிறகு கைகூடும். வீடு கட்டுவது சிலகாலம் தள்ளி வைப்பது நல்லது. அல்லது கட்டிய வீடாக வாங்கலாம். குழந்கைள் படிப்பு மற்றும் தொழில் விஷயமாக பிரிவு ஏற்படலாம். இவ்வருடம் நன்மையும் தீமையும் கலந்த காலமாகும். பிரதி வியாழ்கிழமை குரு வழிபாடு, சனிக்கிழமைகளில் சனி வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாடு கெடுதலான பலன்களை நீக்கி நற்பலன்களை அதிகமாக்கும். மொத்தத்தில் 60 சதவீத நன்மைகள் ஏற்படும்.

"கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம்) பலன்"

Kumba Rasi ஆயுள்காரகனாகிய சனியை ஆட்சிவீடாகக் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள். இதுவரை குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்றிருந்த குரு, சித்திரை 25ம் தேதி 3மிடத்தில் மறைகிறார். 11-5மிடத்தை விட்டு ராகு கேது வைகாசி 23ல் 10-4மிடத்தை அடைகின்றனர். ஐப்பசி 15ம் தேதிமுதல் அஷ்டமத்துச் சனி விலகும். இதனால் ஐப்பசி 15ம் தேதிவரை உங்ககள் வாழ்க்கையில் சில சங்கடங்களும் பிறகு அமைதியும் ஏற்படும். வைகாசி 23ம் தேதிக்குப் பின் குழந்தைகள் நலன் நன்கு அமையும். தொழில் துறையில் இருந்த முடக்கங்கள் ஐப்பசிக்குப் பிறகு மறையும். ஐப்பசி 15க்குப் பின் புதிய முயற்சிகளைத் துவங்கலாம். ஐப்பசி கார்த்திகையில் தடைப்பட்ட திருமணங்கள் நடக்க வாய்ப்புண்டாகும். பணவிஷயத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளமையால் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். தொழில் சிறப்பாக அமைய இஷ்ட தெய்வ வழிபாடு பலன் கொடுக்கும். மொத்தத்தில் இவ்வருடம் 60 சதவீத நன்மைகள் உண்டாகும்.

"மீன ராசி (பூரட்டாதி 4ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி) பலன்"

Meena Rasi தேவ குருவை ஆட்சி வீடாகக் கொண்ட மீன ராசிக்காரர்கள். ஜன்ம குரு பாதிப்பு சித்திரை 25ல் நீங்கும். இதுவரை தொழில் ஸ்தானத்திலும் சுக ஸ்தானத்திலும் இருந்த ராகு-கேதுக்கள் 9-3மிடங்களுக்குச் செல்கிறார்கள். ஐப்பசி 15ம் தேதி ஏற்படும் அஷ்டம சனி தொழில் துறையில் சரியான போட்டியை ஏற்படுத்தும். ஆனால் வெற்றியும் கிட்டும். இவ்வருடம் வெகுகாலம் தடைப்பட்டிருந்த திருமணங்கள் இனிதே நிறைவேறும். தொழில் துறையில் இருந்த தேக்க நிலை மறையும். பண விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. சொந்தமாக வீடு கட்டி கிரகப்ரவேசம் செய்யும் வாய்ப்பு அதிகம். உத்யோகஸ்தர்கள் இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவர். புரட்டாசி மாதம் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படலாம். ஐப்பசி 15ந்துக்குப் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு சனி அன்றும் தெரிந்த வகையில் சனி வழிபாடு செய்யவும். ஆஞ்சநேயர் வழிபாடும் நன்மை தரும். மொத்தத்தில் 60 சதவீதம் நன்மையே நடக்கும்.
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!