Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
அமலனாதிப்பிரான்
 தனியன்கள்
ஆபாதசூடமநுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்
காட்டவேகண்டபாத கமலநல்லாடையுந்தி
தேட்டருமுதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே
பாசுரங்கள்
*அமலனாதிபிரான் அடியார்க்கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன்நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான், திருக் -
கமலபாதமவந்து என்கண்ணிலுள்ளனவொக்கின்றவே. .     --- (1)

உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரைக்
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான்,
அரைச்சிவந்தவாடையின்மேல் சென்றதாமெனசிந்தனையே.--(2)

* மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் -
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்
அந்திபோல்நிறத்தாடையும அதன்மேலயனைப்படைத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.                  ---(3)

சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து -
உதிரவோட்டி, ஓர்வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான், திருவயிற் -
றுதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.                    ---(4)

பாரமாய பழவினைபற்றறுத்து, என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்கொலறியேன் அரங்கத்தம்மான்,
திருவாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.          ---(5)

துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன், அஞ்சிறைய -
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயவப்பன்
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை, முற்றும்
உண்டகண்டம்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.     ---(6)

கையினார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல் -
மெய்யனார், துளபவிரையார் கமழ்நீள்முடியெம் - ஐயனார்,
அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.               --(7)

பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட, அமரர்க் கரியவாதிப்பிரான்
அரங்கத்தமலன்முகத்துக் கரியவாகிப்புடைபரந்து
மிளிர்ந்துசெவ்வரியோடி, நீண்டவப் - பெரியவாயகண்கள்
என்னைப்பேதைமைசெய்தனவே.                                            ---(8)

*  ஆலமாமரத்தினிலைமேல் ஓருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனிஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே.         ---(9)

*  கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெய்
உண்டவாயன், என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள்  மற்றொன்றினைக்காணாவே.                     --- (10)



அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி.  *இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.  
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!